திங்கள், 31 ஜனவரி, 2011

கவிதை


கண்ணே ,
நீ தோட்டத்தில் உலவ செல்லாதே.
பூக்கள் கோபபடுகின்றனவாம்!
தேன் உண்ண மறுத்து- வண்டுகள்
உன்னை  சுற்றுவதால் ...

அன்பே ,
நீ சீக்கிரம் கோலமிடசெல்,
முற்றத்து நிலவது காத்திருக்கிறது.
உன் முகம் பார்த்த பின்தான்
அது முகில் மறைய வேண்டும!

கண்ணே ,
நீ கூந்தல் சூடும் பூக்கள் எல்லாம்
ஓரிரு நாளில் வாடுவது இல்லையாம்!
பூக்காரி புலம்புகிறாள்.

அன்பே,
நீ நீர் இறைக்கும்போதேல்லாம் , கேணியில்
உள்ள மீன்களுக்குள் போட்டியாம்!
பிம்பமாக தோன்றும் உன் உதட்டில்
யார் முதலில் முத்தமிடுவதென்று.

                                                      ..... திரு 

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக