செவ்வாய், 22 மார்ச், 2011

காத்திருக்கிறேன் .....!


இரவுகளில் நான்
இமை மூடி விழித்திருந்தேன் ,
உன் முகம் காணா வருத்தத்தில் .

நாட்கள் நரகமாய் 
மணித்துளிகள் யுகங்களாய் 
உணர்வுகள் வெறுமையாய்
சுகங்கள் சுமைகளாய்
கனவுகள் கவிதையாய்
தோன்றுகிறது எனக்கு ...

மௌனித்திருக்கும் என்  அலைபேசி 
சினுங்கும்போதேல்லாம் 
ஆர்பரித்து அடங்கிவிட்டேன்
நீ அழைக்காமல் போனதால் .

காத்திருக்கிறேன் 
உனக்காகவும் ,
உன் நட்பிற்க்காகவும்.

ஒரு நண்பனாய்,உற்ற தோழனாய்

-திரு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக