இரவுகளில் நான்
இமை மூடி விழித்திருந்தேன் ,
உன் முகம் காணா வருத்தத்தில் .
நாட்கள் நரகமாய்
மணித்துளிகள் யுகங்களாய்
உணர்வுகள் வெறுமையாய்
சுகங்கள் சுமைகளாய்
கனவுகள் கவிதையாய்
தோன்றுகிறது எனக்கு ...
மௌனித்திருக்கும் என் அலைபேசி
சினுங்கும்போதேல்லாம்
ஆர்பரித்து அடங்கிவிட்டேன்
நீ அழைக்காமல் போனதால் .
காத்திருக்கிறேன்
உனக்காகவும் ,
உன் நட்பிற்க்காகவும்.
ஒரு நண்பனாய்,உற்ற தோழனாய்
-திரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக